அருவி

பதிப்பகம்... இயக்கம்... ஆய்வு மையம்


பதிப்பகம்

வெளிவந்துள்ள நூல்கள்:

1. பாம்பாட்டிச் சித்தர்

ஆய்வு நூல். சித்தர் பண்பாட்டின் தனிச்சிறப்பு குறித்த ஆய்வுடன் நூல் தொடங்குகிறது. பின்னர் விரிவான ஆய்வுக்குப் பாம்பாட்டிச் சித்தரைத் தேர்வு செய்கிறது. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் சிந்தனையும், பாடல்களின் கவித்துவமும் ஆய்வின் கருப்பொருள்களாகும்.


ஆசிரியர்: .மாட சாமி

விலை: ரூ.30.00

பதிப்பு: மூன்றாம் பதிப்பு (அச்சில்)


2. எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச்சிந்தனைகள்)


கல்விச் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எளிய திறன்களும், உண்மையான ஆர்வமும் கொண்ட கிராமப்புறக் கல்லூரி மாணவர்களிடம் ஓர் ஆசிரியர் கற்ற உயிரோட்டமான அனுபவங்கள்.


ஆசிரியர்: .மாட சாமி

விலை: ரூ.45.00

பதிப்பு: ஆறாம் பதிப்பு 



3.நாய் வால் (சங்கிலிக் கதைகள்)


குழந்தைகளுக்கு வாய் மொழியாகச் சொல்லத்தக்க கதைகள். கதைகளில் சம்பவங்கள் (சங்கிலிக்கதைகள்) சங்கிலியாகத் தொடரும். குழந்தைகளின் வரிசை அறியும் திறனை (sequential skills) வளப்படுத்தும் கதைகள்.


ஆசிரியர்: .மாட சாமி

விலை: ரூ.16.00

பதிப்பு: முதல் பதிப்பு



4.முயல்குட்டியும் போலீசுகாரரும்


குழந்தைகளுக்கான ஓசைக் கதைகள். பிள்ளைகளின் கவனிப்புத்திறனை (ஓசைக் கதைகள்) உறுதிப்படுத்தும் கதைகள்.


ஆசிரியர்: .மாட சாமி

விலை: 16.00

பதிப்பு: முதல் பதிப்பு


ஆய்வு மையம்

ஆண்டு தோறும் சுடர் ஆய்வுப் பரிசு


2003, 2004
ஆம் ஆண்டுகளில் வெளி வந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு (3000 ரூபாயும் சான்றிதழும்). பரிசு வழங்கிய நாள்:27.12.2005, சென்னை.

பரிசு பெற்றோர்:


1.இரா.அறவேந்தன்......................படைப்பாளுமை
2.
பா.ஆனந்த குமார்......................இந்திய ஒப்பிலக்கியம்
3.
மு.இராமசுவாமி........................திருநெல்வேலியில் திரோபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது
4.
பத்ம பாரதி..............................நரிக்குறவர் இன வரைவியல்
5.
.செல்வ ராசு..........................ஆண் ஆளுமையில் பெண் கற்பு
6.
பத்மாவதி................................பெண் கவிதை மொழியும் பெண் கவிஞர்களும்
7.
மு.பழனியப்பன்........................விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்
8.
பொதியவெற்பன்......................சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மவுனமும்
9.
.முகமது அலி.........................யானைகள்:அழியும் பேருயிர்
10.
.முருகேச பாண்டியன்.............பிரதிகளின் ஊடே பயணம்


2006ஆம் ஆண்டு "விசை " சிற்றிதழ் மூலம் நடத்திய கட்டுரைப்போட்டிக்கான பரிசு (ரூபாய் 2000):


பரிசு பெற்றோர்:


1.
அன்பாதவன்.........................தலித் இலக்கிய நோக்கில் தமிழ்ச் சமூகம்
2.
.மெல்பின் ஆன்றோ...............நாட்டார் வழக்காற்றியல்,மார்க்சியம்,அறிவியல்
3.
.ராஜ சேகரன்......................இந்திய சுற்றுப்புறச்சூழல்:வேதனையின் சுவடுகள்
4.
தி.ஜூலியன்.........................கூத்தங்குழியில் தீ தாண்டுதலும் தேங்காய் செண்டும்
5.
சிலம்பு நா.செல்வராசு..............வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மண முறைகளும்



இயக்கம்


வீட்டுக்கல்வி (Home Schooling):


*
வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பிரியாமல் -குழந்தைகளும் பெரியவர்களும் இணைந்து -ஒருவருக்கொருவர் கற்பித்தபடி -ரசித்து, அனுபவித்துக் கற்பது வீட்டுக்கல்வி அல்லது வீட்டில் கற்றல்.

* '
புத்தகத்தைப் படி; பரீட்சை எழுது' என்ற பள்ளி மாதிரியில் இருந்து இது விலகியது, குழந்தையின் ஆர்வம், விருப்பம், தேர்வு ஆகியவை வீட்டுக் கல்வியின் அடிப்படைகள்.

*
சராசரியாகக் கல்வி கற்ற பெற்றோர் குழந்தைக்குக் கற்றுத் தருவதில் பள்ளி ஆசிரியர்களை விஞ்சி நிற்பார்கள் என்பது அனுபவப்பூர்வ உண்மை.

*
கற்றுக் கொள்ளும் பிள்ளைகளிடத்தும் , கற்பிக்கும் பெற்றோர் தங்களிடத்தும் கொண்டுள்ள நம்பிக்கை (trust) வீட்டுக்கல்வியின் அடிப்படையாகும்.

*
ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறனும் (Learning Style) தனித்துவமானது. அதைக் கண்டறியப் பள்ளிகளால் முடியாது. வீட்டுக் கல்வியால் மட்டுமே முடியும்.

*
குழந்தைகளிடம் கதைகளின் வழி ஓர் உரையாடலைத் தொடங்க அருவி இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது. ஒன்று 'நாய் வால்', இது சங்கிலிக் கதைகளின் (chain tales) தொகுப்பு. மற்றொன்று 'முயல்குட்டியும் போலீசுகாரரும்'.இது ஓசைக் கதைகளின் (tales with sound effect) தொகுப்பு.

* '
அருவி' தொடர்ந்து மாதந்தோறும் வீட்டுக் கல்விக்கு உதவும் நூல்களை வெளியிட உள்ளது.



முகவரி:


"அருவி”,

19, சந்தானம் நகர்,

பார்க் தெரு,
மதுரை
- 625003.


தொலைபேசி: 0452-2692532

செல்: 9444164836

மின்னஞ்சல்: aruvi DOT ml AT gmail DOT com

"அருவி”,

F6, பிளாக் 1, குவீன்ஸ் பார்க்,

எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் சாலை

சாலிகிராமம்,

சென்னை - 600093.


செல்: 94441 33228